முதன்மை
பொதுவிநியோகத் திட்டத்திற்கு தேவையான இன்றியமையாப் பொருட்களை கொள்முதல் செய்து, சேமித்து, விநியோகிக்கும் உன்னத பணிகளை மேற்கொண்டிட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1972-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு மேற்கண்ட செயல்களை 54 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்து வருகின்றது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நிறுவனங்கள் சட்டம், 1956 சட்டப்பிரிவு 25-ன் கீழ் (நிறுவனங்கள் சட்டம், 2013 சட்டப்பிரிவு 8) 01.04.2010 அன்று பதிவு செய்யப்பட்டு "ஆதாயம் இல்லை இழப்பு இல்லை" என்ற கோட்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பதினோரு இயக்குநர்களைக் கொண்ட இயக்குநர்கள் குழுவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் ஒன்று என 39 மண்டலங்களாகவும், சென்னை நகரில் இரண்டு மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு முதுநிலை மண்டல மேலாளர்கள்/ மண்டல மேலாளர்கள் தலைமை தாங்குகின்றனர். கழகத்தில் 6,688 நிரந்தர ஊழியர்களும், 8,117 பருவகால ஊழியர்களும் மாநிலம் முழுவதும் உள்ள தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள், கிடங்குகள், நவீன அரிசி ஆலைகள், நியாயவிலைக் கடைகள் மற்றும் அமுதம் பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிகின்றனர். மேற்கூறிய ஊழியர்களைத் தவிர, கழகத்தின் கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் 4,010 சுமைதூக்குபவர்களும், 31,630 பருவகால சுமைதூக்குபவர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலாண்மை
நிர்வகிக்கப்படுகிறது.நிர்வாக ரீதியாக முழு மாநிலமும் 39 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது மற்றும் ஒவ்வொரு மண்டலத்திலும் முதுநிலை மண்டல மேலாளர்கள்/மண்டல மேலாளர்கள் தலைமை தாங்குகின்றனர்.
செயல்பாடுகள்
(அ) பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் முறையின்கீழ் இந்திய உணவுக் கழகத்தின் முகவராக தமிழ்நாட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மற்றும் கேழ்வரகு கொள்முதல் செய்தல்.
(ஆ) தரமான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றைக் கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகம் செய்தல்.
(இ) மாநில மற்றும் ஒன்றிய அரசால் அவ்வப்பொழுது அறிவிக்கப்படுகிற மக்கள் நலத்திட்டங்களுக்கு உணவு மற்றும் இதர பொருட்களைக் கொள்முதல் செய்தல் சேமித்தல் மற்றும் விநியோகம் செய்தல்.
பொருளாதார நிலை






